2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கடல் சார் உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


கடல் சார்  உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாத்தல்  தொடர்பான  செயலமர்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில் கடற்கரையோரமாக உள்ள தாவரங்களை எவ்வாறு பாதுகாப்பது, இதன் மூலம் எவ்வாறு வளங்களை பெருக்கி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.

குறிப்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்கள் இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

யாழ். அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .