2025 ஜூன் 18, புதன்கிழமை

வீதி விபத்தில் வயோதிபர் பலி

Super User   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தனியார் பேருந்து மோதியதில் வயோதிபர் ஒருவர்; இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ். அஞ்சல் திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மனநோயால் பாதிக்கப்பட்ட வயோதிபர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் ஊர்காவற்துறை பிரதேசத்தை சேர்ந்த தனியார் பேருந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முதியவர் அடையாளம் காணப்படாத நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .