2025 ஜூன் 18, புதன்கிழமை

மின் தாக்கிய இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2013 மே 08 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞர் கோப்பாய் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கொடிகாமம் கச்சாய் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா செந்தூரன் (வயது 19) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் குத்தகைக்கு மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்த இவர்,  கோப்பாய் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த வேளையிலேயே மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது இவர் தலை கீழாக மரத்திலிருந்து நிலத்தில் விழுந்ததால்,  தலையின் பின்புறத்தில் பாரிய அடிகாயம் ஏற்பட்ட நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .