2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கலைப்பீட மாணவர்கள் விரிவுரைகளுக்கு திரும்பினர்

Super User   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை விரிவுரைகளுக்கு திரும்பியுள்ளனர்.கலைப்பீடத்தை சேர்ந்த 13 மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி வெளிக்கிழமை முதல் வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்து.

இந்த தீர்மானத்திற்கு கலைப்பீட மாணவர்கள் ஒன்றியம் எதிர்ப்புத் வெளியிட்டதுடன் குறித்த தினத்திலிருந்து விரிவுரைகளை பகிஷ;கரிக்க தீர்மானித்தது. இதனால் யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் விரிவுரைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் தடை உத்தரவு நீக்கப்படவுள்ளதாக உப வேந்தர் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து இன்று 25ஆம் திகதி புதன்கிழமை முதல் கலைப்பீட மாணவர்கள் விரிவுரைகளில் கலந்துகொள்வது என கலைப்பீட மாணவர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .