2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் மக்கள் சந்திப்பு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 06 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
 
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் பொலிஸாருக்கும் பிரதேச பொதுமக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
இச்சந்திப்பு, கீரிமலை நகுலேஸ்வர வித்தியாலய மண்டபத்தில் காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி றொசான் தகநாயக்கா தலைமையில் நேற்று பிற்பகலில் நடைபெற்றது.
 
பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு என்பன இச்சந்திப்பில் கலந்துகொண்டன.
 
சந்திப்பின்போது, கீரிமலை, நகுலேஸ்வரம், மாவிட்டபுரம், மாவைக்கலட்டி வீமன்காமம் ஆகிய பிரதேசங்களில் அண்மையில் மீளக் குடியமர்தப்பட்ட மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக விடயங்கள் பற்றி பொலிஸாரினால் தெளிவுபடுத்தப்பட்டது.
 
அத்துடன் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குள் டெங்கு ஒழிப்பு, பாதுகாப்பு, மற்றும் பெண்கள் சிறுவர்கள் உரிமைகள் பாதுகாப்பு  என்பன பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், மக்களுடைய எதிர்பார்ப்புகள் கேட்டறியப்பட்டு, ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .