2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தம்பிராசா முறைப்பாடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட முத்தையாப்பிள்ளை தம்பிராசாவுக்கு நேற்று இரவு கையடக்கத்தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்பிராசா எட்டு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நடை பவனியை கடந்த 5ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஆரம்பித்திருந்தார்.

பாதயாத்திரையின் இடைநடுவில் தனக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தம்பிராசா முறையிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

'நேற்றிரவு 9.45 மணிக்கு முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு நடைபவனியில் வந்துகொண்டிருந்த வேளையில், என்னுடைய கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்தி இருவேறு நபர்கள் சிங்கள மொழியில் தூஷன வார்த்தைகள் பேசியதுடன்,   தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவோம் என அச்சுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நியாயமான போராட்டமொன்றினை தான் முன்னெடுத்து வருவதாகவும், யாருடைய எச்சரிக்கைக்கும் அடிபணியப் போவதில்லையெனவும் தொலைபேசி மிரட்டலுக்கு தான் பதிலளித்தாகவும் அவர்  தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .