2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் ஆரம்பம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


யாழ்.மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் பிரதேச செயலகங்களின் ஊடாக நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை சுகாதாரத் திணைக்களத்தினால் ஜப்பசி மாதம் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெறும் இந்த டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள், பொது மருத்துவ மாதுக்கள், சமுர்த்தி அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பட்டதாரிப் பயிலுநர்கள் மற்றும் சுகாதாரத் தொண்டர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் வீடுகள், கடைகள், பொது இடங்கள் மற்றும் பாடசாலைகள் எனப் பல இடங்களுக்கும் சென்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில்; ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .