2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தற்காலிக அஞ்சல் ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


யாழில் அஞ்சல் திணைக்கள தற்காலிக ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்கக்கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். அஞ்சல் தலைமையகத்தில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்களே இன்று காலை 8.00 மணி முதல் மேற்படி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.மாவட்ட அஞ்சல் திணைக்களத்தில் நிரந்தர நியமானத்திற்கான 13 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், தற்காலிக ஊழியர்களான நாங்கள் 10 வருடங்களிற்கு மேலாக நிரந்தரமாக்கப்படாமல் அஞ்சல் திணைக்களத்தில் கடமையாற்றி வருகின்றோம்.

யாழ்.மாவட்ட அஞ்சல் திணைக்களத்தில் தற்காலிக ஊழியர்களாக 47 இற்கும் மேற்பட்டவர்கள் கடமையாற்றி வருகின்றார்கள்.
இந்நிலையில் அஞ்சல் திணைக்களத்தினால் 2011ஆம் ஆண்டு மேற்படி 13 வெற்றிடங்களை நிரப்புமாறு பணிப்புரை வந்தபோதும், இதுவரையிலும் குறித்த வெற்றிடம் நிரப்பப்படவில்லை.

நிரந்தர நியமனம் தொடர்பாக வடமாகாண அஞ்சல் அத்தியட்சகருடன் தொடர்பு கொள்ளுவதற்கு அனுமதி பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அஞ்சல் அத்தியட்சகரின் தனிப்பட்ட உதவியாளர் அதற்கான அனுமதியினை ஏற்படுத்தித் தரவில்லை.

இந்நிலையில், யாழ்.மாவட்ட அஞ்சல் திணைக்களத்திலுள்ள வெற்றிடங்களுக்கு தங்களை நியமிக்குமாறு வலியுறுத்தியே இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தற்காலிக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இன்று நடைபெறும் அஞ்சல் தின நிகழ்வை புறக்கணிப்பதுடன், ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுமென தற்காலிக ஊழியர்கள் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .