2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலையில் கணினிகள் திருட்டு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்.கல்வியங்காடு காசிப்பிள்ளை வித்தியாலயத்தில் இரண்டு கணினிகள் புதன்கிழமை(9) இரவு திருடர்களினால் திருடப்பட்டுள்ளமை  தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி  மேலும் தெரியவருவதாவது,

கல்வியங்காடு பொதுச்சந்தைக்கு பின்னால் அமைந்திருக்கும் கல்வியங்காடு காசிப்பிள்ளை வித்தியாலயத்தின் கணினி அறையில் இருந்த இரண்டு கணினிகளை திருடர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாடசாலை அதிபரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி கணினிகள் வித்தியாலயத்தின் பழையமாணவர்களினால் வித்தியாலயத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது என அதிபர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .