2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாணசபை உயிர்ப்புடன் இருக்க வேண்டும்: கஜேந்திரன்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண சபை உயிர்ப்புடன் கடமையாற்றி மக்கள் நலன்களைப் பேணுவதில் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தமிழ் மக்களின் நலுனுக்காக இல்லாமல் வேறு ஒரு சலுகைக்காகவேஇன்று முரண்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அவசரப்படுவதினால் தமிழ் மக்களின் நலன்சார் விடயங்களை எதிரிகள் வேறுவிதமாகவும் உண்மைக்குப் புறம்பாகவும் பிரச்சாரம் செய்யவதற்கு வழிசமைக்கும்.

தமிழ் இனத்தின் எதிர்பார்ப்புக்கள் சம்பந்தமான முடிவுகளை அமைதியாக மேற்கொள்ள வேண்டும். இத்தருணங்களில் சில கஷ்டங்கள் மக்களுக்கு ஏற்படும். இருந்தபோதிலும் இந்த அமைதி நல்லதொரு தீர்வினைப் தமிழ் மக்களுக்கு பெற்றுத்தரும்.

இதற்காக தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தினை உணர்வுடனும் இலட்சியத்துடனும் தைரியமாக முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .