2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பொலிஸ் வாகனம் மீது கல்வீச்சு : சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை யாழ்.நீதிமன்றம் தலா 2 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்தது.

நாயன்மார்கட்டு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலினை தீர்ப்பதற்காக பொலிஸார் சென்றபோது, பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் 5 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட 5 இளைஞர்களையும் கடந்த செவ்வாய்க்கிழமை (8) யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அப்பகுதி பொதுமக்களின் தகவலின் பிரகாரம் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் இரு நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு 11.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின்னர் பொலிஸார் திங்கட்கிழமை (28) யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோது, யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்கள் இருவரையும் தலா 2 லட்சம் சரீர பிணையில் செல்ல அனுமதித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .