2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இரு நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அலேசியஸ் நிதர்சன்


யாழ். மகளிர் அமைப்பின் தலைவி திருமதி சரோஜா சிவச்சந்திரன் எழுதிய இரு நூல்களின்; வெளியீட்டு விழா யாழ்.வேம்படி பாடசாலைக்கு அருகாமையிலுள்ள சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் மண்டபத்தில் இன்று புதன்கிழமை (30) நடைபெற்றது.

 'வடக்கு மாகாணத்தில் காணி உரிமையும் பெண்களும்'இ ' வடக்கு மாகாணத்தில் பெண் தலைமையாகும் குடும்பங்கள்' என்ற இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நூல்கள் வெளியீட்டு விழாவில், முதல் நூலினை வடமாகாண உதவிக் காணி ஆணையாளர் கே.மகேந்திரனும் மற்றைய நூலினை யாழ்.மாவட்ட மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர் ந.உதயணியும் வெளியிட்டு வைத்தனர்.

இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பெண்கள் சார்ந்த அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .