2025 ஜூன் 23, திங்கட்கிழமை

போலி மருத்துவர்கள் அறுவருக்கும் தண்டம்

Kanagaraj   / 2013 நவம்பர் 07 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரட்ணம் கனகராஜ்

யாழ்.சாவகச்சேரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி மருத்துவர்கள், ஆங்கில மருந்து கொடுத்த ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து நேற்று செவ்வாய்க்கிழமை (05) தீர்ப்பளித்தது.

சாவகச்சேரி பிரதேசங்களில் போலி மருத்துவர்கள் செயற்படுகின்றார்கள் என கிடைத்த தகவலினையடுத்து சாவகச்சேரி. பருத்தித்துறை.கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச சுகாதார வைத்தியர்கள் இணைந்து கடந்த திங்கட்கிழமை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனை நடவடிக்கையில். போலி மருத்துவர்கள் நால்வரும்.ஆங்கில மருந்துகளை வழங்கிய ஆயுர்வேத மருத்துவர்கள் இருவருமாக மொத்தம் அறுவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்ப்படுத்திய போது நீதிவான்இ போலி மருத்துவர்கள் நால்வருக்கு தலா 5 ஆயிரம் ரூபா அபராதமும்இ ஆங்கில மருந்து கொடுத்த ஆயுர்வேத மருத்துவர் இருவருக்கு தலா 15 ஆயிரம் அபராதம் விதித்ததுடன்இ இனிமேல் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாதென கடுமையாக எச்சரித்து அவர்களை விடுதலை  செய்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .