2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கால்பந்தாட்ட போட்டியில் கைகலப்பு; எண்மர் காயம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 12 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

யாழ். மாலிசந்தியில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியின்போது ஏற்பட்ட கைகலப்பில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகமானது நட்சத்திர அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை தனது விளையாட்டுக்கழக மைதானத்தில் நடத்தி வருகின்றது.

நேற்று திங்கட்கிழமை  இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் அணியும் விண்மீன் அணியும் விளையாடின.  போட்டியின் முதற்பாதி ஆட்டத்தில் விண்மீன் அணி 2 கோல்களைப் பெற்று முன்னிலையிலிருந்தது.

தொடர்ந்தும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் விண்மீன் அணி மேலும் ஒரு கோல் போட அதனை ஞானமுருகன் அணி இரசிகர்கள் முறை தவறிய கோல் எனக்கூறி கோஷமிட்டதுடன், மைதானத்திற்குள் இறங்கி கலவரத்திலும் ஈடுபட்டனர்.

இதனைத் தடுக்கவந்த போட்டி ஏற்பாட்டாளர்களுடன் ஞானமுருகன் அணியின் இரசிகர்கள் முரண்பட போட்டி ஏற்பாட்டாளர்களில் சிலர், இரசிகர்களை வாளால் வெட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இதனால்  8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லியடிப் பொலிஸார் கைகலப்பை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • pravin Wednesday, 13 November 2013 06:51 AM

    அவனுக்கு நல்ல பொழுதுபோகும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .