2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வடமாகாண சமூக அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல்

Kogilavani   / 2013 நவம்பர் 19 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.தபேந்திரன்


வடமாகாண சமூக அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று கைதடி முதியோர் இல்ல கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்றது.

வடமாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி.நளாயினி இன்பராஜ்ஜின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விருந்தினர்களாக சமூக சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்திகா டயஸ், மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளரும் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளருமான அனுசா  கோகுல பெர்ணாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் சமூக அமைச்சினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், அமைச்சினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை மக்கள் பெறுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் எதிர்காலத்தில்  செய்யவேண்டிய  வேலைத்திட்டங்களை  விரைவாக   மேற்கொள்வது தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில்  மாவட்ட சமூக சேவைகள்  உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சமூக சேவைகள்  உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முதியோர் உரிமைகள்  மேம்பாட்டு உதவியாளர்கள், சமூக அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .