2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கோப்பாய் பிரதேசத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: சஞ்சீவ ஜெயக்கொடி

Kogilavani   / 2013 நவம்பர் 20 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
செல்வநாயகம் கபிலன்


யாழ். கோப்பாய் பிரதேசத்தில் குற்றச்செயல்கள் குறைவாக பதிவாகியுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பெறுப்பதிகாரி ஸ்ரீ நிக சஞ்சீவ ஜெயக்கொடி தெரிவித்தார்.

பொலிஸாருக்கும் சிவில் அமைப்புக்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று கோப்பாய் பிரதேச செயலக அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (20) காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

'இனி மழைக் காலம், பண்டிகைக் காலம் இடம்பெறவிருப்பதனால் திருட்டுக்கள் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன. பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அத்துடன், வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, வீட்டில் ஒருவரை பாதுகாப்பிற்கு விட்டுச் செல்ல வேண்டும்.

அண்மைக்காலங்களாக கோப்பாய் மற்றும் அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புப்பட்ட சந்தேகநபர்களை கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கெதிராக  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' எனவும்; அவர் மேலும் தெரிவித்தார்.

கோப்பாய் பிரதேச செயலக பிரதேச செயலாளர் ம.பிரதீபன், சிவில் பாதுகாப்பு குழு அமைப்புக்களின் பிரதிநிதிகள், இணக்க சபை உறுப்பினர்கள், கிராம அலுவலர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இக்கந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .