2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தேசிய மீனவர் தினத்தினை பகிஷ்கரிப்பு: எமிலியாம்பிள்ளை

Kogilavani   / 2013 நவம்பர் 21 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தேசிய மீனவர் தினத்தினை பகிஷ்கரிப்பதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை இன்று வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைப்படகு மீன்பிடியினால் வடபகுதி மீனவர்களின் பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளது.

இது தொடர்பாக இருநாட்டு அரசாங்கங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்த போதும், இருநாட்டு அரசாங்கமும் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு தேசிய மீனவர்கள் தினத்தினை பகிஷ்கரிப்பதுடன், இத்தினத்தினை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய மீனவர்கள் தினம் இன்று (21) கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .