2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 21 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா
யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் எதிர்வரும் நவம்பர் 27,28 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ். போதனா
வைத்தியசாலை தாதிய சங்கத்தின் தலைவர் நல்லையா நற்குணராஜா இன்று வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு மற்றும் சுகயீன விடுப்பு போராட்டங்களின மூலம்,  மேலதிக கொடுப்பனவுகள் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையிலும் அதற்கான சுற்றுநிரூபம்
இன்னமும் வெளியிடப்படவில்லை.

மேலதிக கொடுப்பனவு சுற்றுநிரூபத்தினை வெளியிடுமாறு வலியுறுத்தியும், போக்குவரத்து, தொலைபேசி கொடுப்பனவுகளை நடைமுறைப்படுத்த கோரியும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய வைத்தியப்பிரிவு தாதிய உத்தியோகத்தர்கள் இருநாள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .