2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 21 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

இந்திய மீனவர்கள் 20 பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் இன்று வியாழக்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா புதுக்கோட்டை ஜனதாப்பட்டிணம் பகுதியிலிருந்து 5 படகுகளில் வந்த 20 மீனவர்கள், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என காங்கேசன்துறை கடற்படையினரால் நேற்று புதன்கிழமை (20) இரவு கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினர் மேற்படி மீனவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நீரியல் வளத்துறையினர் மேற்படி மீனவர்களை இன்று (21) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளையில், நீதிபதி மேற்படி மீனவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .