2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மோப்ப நாயின் உதவியுடன் திருடன் கைது

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கோப்பாய் மத்தியில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை மோப்ப நாயின் உதவியுடன் கோப்பாய் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

கோப்பாய் மத்தியிலுள்ள வீடொன்றிலிருந்து 50 ஆயிரம் ரூபா பணமும், 3 பவுண் நகையும் நேற்று முன்தினம் (28) திருட்டுப் போயிருந்தது.
இது தொடர்பாக வீட்டு உரிமையாளரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று (29) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் மேற்படி திருட்டில் ஈடுபட்ட கோப்பாய் மத்தி சூசையப்பர் கோவிலடியினைச் சேர்ந்த நபர் ஒருவரைக் நேற்று மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .