2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பளைப்பகுதியில் பதற்றம்

Kanagaraj   / 2014 மார்ச் 06 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத், சுப்பிரமணியம் பாஸ்கரன், சுமித்தி தங்கராசா

பளைப்பகுதியில் இன்று (06) இடம்பெற்ற விபத்தினை அடுத்து பளை மத்திய கல்லூரி மாணவர்கள்  கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரின் மீது படையினர் தாக்குதல் நடத்தியதையடுத்தே இந்த  பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

யாழிலிருந்து கிளிநொச்சிக்கு அரச உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து, பளைப்பகுதியில் திடீரென மஞ்சள் கடவை பகுதி வழியாக மாணவன் வீதியினைக் கடக்க முற்பட்ட போது, நிலை தடுமாறிய சாரதி பேரூந்தினை அருகிலிருந்த வியாபார நிலையங்களுக்குள் புகுத்தியமையால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 20 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததுடன்;, மேலும் பலர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். படுகாயமடைந்தவர்களில் பளை மத்திய கல்லூரி மாணவனாகிய ஜெயசிங்கம் திவாகரும் (13) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தங்கள் பாடசாலை மாணவன் விபத்துக்குள்ளாகியமையினை கண்டித்தும், குறித்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுகின்றமை நிவர்த்தி செய்யக்கோரியும் பளை மத்திய கல்லூரி மாணவர்கள் பளை மத்திய கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'பொலிஸாரின் அசமந்த போக்கு', 'இக்கல்லூரியின் சொத்து திவாகர் அவரின் நிலைமை?' 'அரசாங்கமே சலுகை செய்யாதே!, பளை  சமூகமே வேடிக்கை பார்க்கிறீர்களா?' , 'பொலிஸ் எங்கே?' 'வளரும் பயிரை முளையில் தீண்டாதே' போன்ற சுலோகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அவ்வேளை அங்குவந்த இராணுவத்தினர் மாணவர்கள் சிலரைத் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் குறித்த இராணுவ வாகனத்தினை முற்றுகையிட்டு வைத்திருந்தனர். பின்னர் அப்பகுதி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்டதினைத் தொடர்ந்து இராணுவ வாகனத்தினை மாணவர்கள் விடுவித்தனர்.

தொடர்ந்து, பளைப் பொலிஸார் குறித்த பாடசாலை அதிபருடன் மேற்கொண்ட கலந்துரையாடலினைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்திருந்தது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .