2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆவா குழுவினர் அறுவர் கைது

Super User   / 2014 மார்ச் 11 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்.சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் குழு மோதலில் ஈடுபட்ட ஆவாக் குழுவினர் என அடையாளங் காணப்பட்ட அறுவரை செவ்வாய்க்கிழமை (11) கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து சிறிய ஆயதங்கள் (நக்கில்ஸ்) சிலவற்றையும் கைப்பற்றியதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி நலன்புரி முகாம் பகுதியில் இருகுழுக்களுக்கிடையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொகான் டயஸின் விசேட உத்தரவின் பேரில் பொலிஸ் குழு சம்பவத்துடன் தொடர்புபட்ட 6 பேரைக் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அறுவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன்,  அறுவரையும் புதன்கிழமை (12)  மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .