2025 ஜூன் 28, சனிக்கிழமை

நெல்லி பிடுங்க மரம் ஏறிய சிறுவன் படுகாயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

அளவெட்டி முத்துமாரியம்மன் கோவிலடியினைச் சேர்ந்த இராசதுரை ஜெனோதரன் (14) என்ற சிறுவன் நெல்லிமரத்தில் ஏறி மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து சனிக்கிழமை (19) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுன்னாகம் தமிழ் கந்தையா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

தனது வீட்டிலுள்ள மரத்திலேறி நெல்லி பிடுங்கிய போது தவறி வீழ்ந்த மேற்படி சிறுவன் படுகாயமடைந்த நிலையில் முதலில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .