2025 ஜூன் 28, சனிக்கிழமை

அடுத்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மே மாதம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் எதிர்வரும் மே மாதம் 26, 27 ஆம் திகதிகளில் நடைபெறுமென ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்கள் இன்று (21) தெரிவித்தனர்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, வலி.வடக்கு மீள்குடியேற்றம், பலாலி ஆசிரியர் கலாசாலை உள்ளிட்ட விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

எனினும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்ட ஏனைய விடயங்கள் கலந்துரையாடப்படாத நிலையில் அவை தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் எதிர்வரும் மே மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதி நடைபெறுமென இணைத்தலைவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .