2025 ஜூன் 28, சனிக்கிழமை

சிறுவர்களுக்கு கலாசாரத்தினை பழக்கும் நடவடிக்கை

Kogilavani   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வி.விஜயவாசகன்


சிறுவர்கள் தமிழ் கலாச்சாரத்தினைப் பழகுதல், பெரியோரைக்கனம் பண்ணுதல் ஆகிய விடயங்களை கற்றுக்கொள்ளும் விதத்திலான நிகழ்வு திங்கட்கிழமை (21) சாவகச்சேரி பூவேந்தா பாலர் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.

நிலையத்தின் நிறுவுனர் கு.மாகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறுவர்கள் இறைவழிபாடுகளில் ஈடுபட்டதுடன், பெரியோரைக் கனம் பண்ணுதல் தொடர்பாக அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

அத்துடன், சிறுவர்களுக்கு புத்தாண்டு கைவிசேடமும் வழங்கப்பட்டதுடன், தமிழ் கலாச்சாரத்தினை எவ்வாறு பின்பற்றி வாழவேண்டும் என்றும் போதிக்கப்பட்டது.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் இந்தப் பராமரிப்பு நிலையத்தில் தங்கள் பிள்ளைகளை காலையில் விட்டுச் சென்று மாலையில் மீண்டும் வந்து கூட்டிச் செல்வது வழமையாகும். அந்த வகையில் 100 சிறுவர்கள் இங்கு தமது  கல்வி மற்றும் இதர நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

இங்கு குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு, கணினிக்கல்வியுடன் சிறுவர்கள் ஓய்வெடுக்கக்கூடிய வசதிகளும் இருப்பதுடன், இவர்களை கண்காணிக்கும் பணியில் 5 ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .