2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

குழிக்குள் வீழ்ந்து குடும்பஸ்தர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.குப்பிளான் பகுதியில் வீடு கட்டுவதற்காக வெட்டப்பட்ட அத்திபாரக் கிடங்கினுள் நேற்று(23) வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலசிங்கம் மதனரூபன்(34) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலை தகவல்கள் இன்று(24) தெரிவித்தன.

அத்திபாரத்திற்குள் கற்களைப் போட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த நபர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்ததை அடுத்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்கான யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .