2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

காலணி விற்பனை நிலைய கமெரா கழற்றப்பட்டதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

யாழ். நகரிலுள்ள காலணி விற்பனை நிலையமொன்றின்  பொருட்களை சேதப்படுத்தியதுடன்,  அங்கு பொருத்தப்பட்டிருந்த  பாதுகாப்புக் கமெராவை கழற்றியமை தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் குறித்த கடையின் உரிமையாளர் வியாழக்கிழமை (24) முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

16,500 ரூபா பெறுமதியான பாதுகாப்புக் கமெரா கழற்றப்பட்டதுடன், சுமார் 13,000 ரூபா பெறுமதியான காலணிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி அருகிலுள்ள வியாபார நிலையத்தின் மீது குறித்த கடை உரிமையாளர் செய்தார்.

இதனைத் தொடர்ந்து மற்றைய வியாபார நிலையத்தின் உரிமையாளரை  அழைத்த பொலிஸார், பாதுகாப்புக் கமெராவை திருப்பிக் கொடுக்குமாறும் சேதமடைந்த பொருட்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறும் அறிவுறுத்தியதாகவும் பொலிஸார் கூறினர்.

இதற்கு மற்றைய வியாபார நிலையத்தினர் சம்மதம் தெரிவிக்கவே இருவரையும் சமாதானம் செய்து பொலிஸார் அனுப்பி வைத்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .