2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கொரிய நாட்டு விசேட குழுவினர் யாழ்.விஜயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

 
சிறுவர் மற்றும் முதியோர்களுக்கான கொரிய நாட்டு விசேட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்று(24) விஜயம் செய்தனர்.
 
இதன் போது, யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து, சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் தொடர்பான விபரங்களை திரட்டியுள்ளனர்.

யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவி சரோஜா சிவச்சந்திரன் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில், சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் ஆய்வு செய்து வரும் நிலையில், இவ்வருடம் அந்த ஆய்வினை இலங்கையில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .