2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலை ஆண்கள் விடுதியில் பதற்றம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்தி நால்வர், இன்று (24) இரவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாலசிங்கம் ஆண்கள் விடுதிக்குள் நுழைந்து தேடுதல் மேற்கொண்டதில் விடுதியில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

 விடுதியினைச் சுற்றி இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக முதலாம் வருட சிங்கள மாணவர்களுக்கும் இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவம் தொடர்பிலே விசாரணைகளை மேற்கொள்ள வந்ததாக புலானாய்வுப் பிரிவினர் விடுதிக் காப்பாளருக்குத் தெரிவித்துள்ளனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .