2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கோபியின் உறவினர் ஒருவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

வவுனியா,நெடுங்கேணியில் வைத்து கடந்த 11 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புதிய தலைவர் என்று கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபியின் (வயது31) உறவினர் ஒருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், குருநகர் பீஜ் வீதியைச்சேர்ந்த அருளானந்தன் டினேஷ்குமார் என்பவரே சந்தேகத்தின் பேரில் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என்று கருதப்பட்ட கோபி மற்றும் தேவியன், அப்பன் ஆகியோருக்கு உதவியதாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோபியின் தொலைபேசி அழைப்பினை சோதனை செய்த போது, கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோருக்கு உதவி செய்தார் என்ற அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட அவரை கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .