2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'நகர அனர்த்த மீட்சித் திறனை கட்டியெழுப்புதல்' செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவானது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் யாழ். மாநகரசபையுடன் இணைந்து 'நகர அனர்த்த மீட்சித் திறனை வளர்த்தல்' என்னும் தொனிப்பொருளில் பயிற்சிப்பட்டறையை வெள்ளிக்கிழமை (25) யாழ். பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடத்தியது. 

இப்பயிற்சிப்பட்டறையில் இவ்வருட அனர்த்த முகாமைத்துவக் கணிப்பு, நகரத்தில் வெள்ளம் தேங்கி நிற்கும் கால்வாய்களை புனரமைப்பது போன்றன தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளான சுனில் ஜெயவீர மற்றும் வஜிர ஹெட்டியாராட்சி, யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை ஆகியோர் கருத்துக்களை வழங்கினார்கள்.

இச்செயலமர்வில் அரச அதிகாரிகள், வளிமண்டலவியல் திணைக்களத்தினர், வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .