2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நல்லிணக்க ஆணைக்குழுவினால், வேலையில்லாத இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இன்று(27) கொக்குவில் இந்து கல்லூரியில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக நல்லிணக்க மைய ஆணையாளர் செல்வா யாதவன் தெரிவித்தார்.

பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கையில 500 இற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டதுடன் தொழில்கள் சம்பந்தமான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.
மருத்துவதாதி, நடனபாட ஆசிரியர், சங்கீத பாட ஆசிரியர், ஆங்கில பாட ஆசிரியர், வாத்தியக் கலைஞர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், எழுதுநர்கள், அலுவலர்கள், கணினி இயக்குநர், விவசாய மேற்பார்வையாளர், விவசாய அலுவலர்கள், மின் இணைப்பாளர், தச்சு வேலை, மேசன், வர்ணம் பூசுபவர்கள், ஒட்டு வேலை செய்பவர்கள், வாகனம் திருத்துவர்கள், வாகன வேலை செய்பவர்கள், வாகனத்திற்கு வர்ணம் பூசுபவர்கள், கூலி ஆட்கள், மற்றும் கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட வேலைகளுக்கே ஆட்கள் சேர்க்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .