2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழில் ஜனாதிபதியின் பதாகை எரிப்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகை, இனந்தெரியாத நபர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு எரியூட்டப்பட்டுள்ளது.

அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பதாகைகளில் 12 அடி உயரமான ஒரு பதாகையே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்விடத்திற்கு இன்று (28) அதிகாலை சென்றுள்ள இராணுவத்தினர், எரியூட்டப்பட்ட பதாகையினை அகற்றிச் சென்றுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்.சாள்ஸ் மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் பதாகைகளும் இவ்வாறு எரியூட்டப்பட்ட நிலையில் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டன.

ஜனாதிபதி, யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த தருணங்களில் அவரை வரவேற்கும் முகமாக மேற்படி பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .