2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உடைந்த நாற்காலியில் எப்படி உட்காருவது : சி.வி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 28 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எங்களுக்கு உடைந்த நாற்காலிகளை வழங்கி அதில் உட்காருமாறு அரசாங்கம் கேட்கின்றது. நாங்கள் எப்படி உட்காருவது எமக்கான அதிகாரங்கள் போதாது என வடமாகாண முதலமைச்சரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையில் வைத்தே அவர் நேற்று திங்கட்கிழமை மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

யுத்தக்காலத்தின் போது வடமாகாண சபை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு பதிலாக இராணுவம் அல்லாத ஒருவரை ஆளுநராக நியமிப்பதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் வரை காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னர் கந்தசாமி கமலேந்திரனை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி குற்றவாளியாக இனங்கண்டு கட்சியிலிருந்து நீக்கியமை எனக்கு கவலையளிக்கின்றது என்றார்.

புதிய எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்பதில் மகழ்ச்சியடைகின்றேன். தொடர்ந்து வரும் செயற்பாடுகள் பயன்மிகுந்ததாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்படவேண்டும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .