2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

புரிந்துணர்வுக்கு கலாசார வேலைகள் உதவும்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 29 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா  

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு மற்றும் பரஸ்பரத்தை ஏற்படுத்துவதற்கு கலாசார வேலைத்திட்டங்கள் உதவியாகவிருக்குமென கலை, கலாசார அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை (29)  நடைபெற்ற உலக நடன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் விசேடமாக ஒரு பரிந்துரை காணப்படுகிறது. அதாவது இந்நாட்டிலுள்ள மக்களுக்கிடையில் ஒற்றுமை, பரஸ்பரம், புரிந்துணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கில்  கலை, கலாசாரத்தை வலுப்படுத்த வேண்டுமென்பதே.

எமது இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கலாசாரம் மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு செயற்பட்டு வருகிறது. அத்துடன், கலை கலாசாரத்தை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில்; 02 கலாசார நிலையங்கள் (காரைநகர், உடுவில்) செவ்வாய்க்கிழமை (29)  திறந்துவைக்கப்பட்டுள்ளன.

மேற்படி  கலாசார நிலையங்களூடாக யாழ்ப்பாணத்திலுள்ள  கலைஞர்கள் கலை, மற்றும் கலாசாரத்தை வளர்த்துக்கொள்வதுடன், கலை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளமுடியும்.

மேலும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரிடம் யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட இடங்களில் கலாசார நிலையங்கள் அமைப்பதற்கான காணிகளை ஒழுங்கு செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

மத்திய, மாகாண அரசுகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இணைந்து இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முனைவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பல ஆலயங்கள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளதை அவதானித்தேன். மத விவகார அமைச்சும் மத்திய அமைச்சும் கலாசார அமைச்சும் இணைந்து இந்த ஆலயங்களை புனரமைப்பதற்கான  நிதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .