2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

மல்லாகம் சோடாக் கம்பனி ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை (28) இரவு திருடப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று செவ்வாய்க்கிழமை (29) சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் புதன்கிழமை (30) தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் முற்றத்தில் 2 ½ இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் திங்கட்கிழமை (28) இரவு திருடப்பட்டிருந்தது.

மோட்டார்  சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் அதன் உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்நிலையில் சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை(29) காலையிலிருந்து மோட்டார் சைக்கிளொன்று அநாதரவாக திறப்புடன் நிற்பதாக பொதுமக்கள் பொலிஸாரிற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளினை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .