2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வரட்சியிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கும் பயிற்சிப் பட்டறை

Kogilavani   / 2014 மே 02 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


சொர்ணகுமார் சொரூபன்


வடமாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் வரட்சியிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சிப் பட்டறை திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது. 

இந்த பயிற்சிப் பட்டறையில் தூவல் நீர்ப்பாசனத்தின் கீழான பயிர்ச் செய்கை மேற்கொள்ளல், பொசிவு நீர்ப்பாசனம், போத்தல் நீர்ப்பாசனம், சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் பயிர் செய்தல், வயற்கொள்ளளவை அறிந்து நீர்ப்பாசனம் செய்தல், பொலித்தீன் குழாய் நீர்ப்பாசனம் உள்ளிட்டவை பற்றி விவசாயிகளுக்கு விவசாய போதனாசிரியர்களினால் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், யாழ்.பல்கலைக்கழக விவசாயபீட பீடாதிபதி திருமதி சிவமதி சிவச்சந்திரன், விவசாய பணியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X