2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கொன்சலட் ஜெனரலுக்கு பிரிவுபசாரம்

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


கஜானா நாட்டுக்கு இடம்மாற்றம் பெற்றுச் செல்லும் யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சலட் ஜெனரல் வெங்கடாசலம் மகாலிங்கத்திற்கு அகில இலங்கை இந்துமா மன்றத்தின் ஏற்பாட்டில் பிரிவுபசார நிகழ்வு சனிக்கிழமை (03) நடைபெற்றது.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இந்தப் பிரிவுபசார நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது இந்துமா மன்றத்தினர் மகாலிங்கத்திற்கு பொன்னாடை போர்த்தியும், நினைவுச்சின்னமும் வழங்கியும் கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்.பல்கலைகழக பேராசிரியர்கள் இந்துமா மன்றத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

யாழில் இந்தியத் துணைத்தூதரகம் நவம்பர் 2010இல் ஆரம்பிக்கப்பட்ட போது முதலாவது கொன்சலட் ஜெனரலாக நியமனம் பெற்று கடமையாற்றி வந்த வெ.மகாலிங்கம் இராஜதந்திர துறையில் இருபது வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர் ஆவார்.

இவர் வெகுவிரைவில் கயானா நாட்டின் இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடமைகளை  பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X