2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 மே 07 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பிரதான வீதியில் புதன்கிழமை (07) நடந்துசென்றுகொண்டிருந்த யாழ். 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை பீஸ்மன் (வயது 70) என்பவர் மீது  தனியார் பேருந்து மோதியதால், அவர் உயிரிழந்ததாக  யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த பேருந்துச் சாரதி கைதுசெய்யப்பட்டதுடன், பேரூந்தும்  பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்விபத்து தொடர்பில் விரிவான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X