2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கொலைச் சந்தேகநபர் விடுதலை

Kogilavani   / 2014 மே 07 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா 

யாழ்.ஆனைக்கோட்டைப் பகுதியில் நபர் ஒருவரை மண்வெட்டியால் கொத்திக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை யாழ்.மேல் நீதிமன்ற நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர்   புதன்கிழமை (07) விடுதலை செய்தார்.

ஆனைக்கோட்டையினைச் சேர்ந்த சின்னராசா திருச்செல்வம் என்பவர், 2010 ஆண்டு அதேயிடத்தினைச் சேர்ந்த நேசரட்ணம் என்ற நபரினை மண்வெட்டியால் கொத்திக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டார்.

தொடர்ந்து மேற்படி வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்.மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு, யாழ்.மேல் நீதிமன்றம் குறித்த நபரை பிணையில் விடுதலை செய்திருந்ததுடன், கொலை வழக்கு தொடர்ச்சியாக மன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மேற்படி வழக்கு புதன்கிழமை (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, திருச்செல்வத்தினை விடுதலை செய்து நீதவான் தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X