2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆங்கில மொழி விவாதப் போட்டி

Super User   / 2014 மே 09 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா


வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஆங்கில தின விவாதப் போட்டியின் சிரேஸ்ட பிரிவில் வேம்படி மகளிர் கல்லூரியும், கனிஷ்ட பிரிவில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியும் முதலிடம் பெற்றனர்.

வடமாகாணப் பாடசாலை ரீதியில் நடத்தப்பட்ட இந்த விவாதப் போட்டியில் சிரேஸ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளில் தலா 24 அணிகள் பங்குபற்றியிருந்தன.

முதற்சுற்றுப்போட்டிகள் மார்ச் 8 ஆம் திகதிகளிலிருந்து சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பமாகி நடைபெற்று வந்ததுடன் விவாதப் போட்டிகளின் இறுதிப்போட்டி நேற்று வியாழக்கிழமை (08) யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது.

சிரேஸ்ட பிரிவின் இறுதிப்போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரியும் வேம்படி மகளிர் கல்லூரி அணியும் விவாதத்தில் ஈடுபட்டன. இதில் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடம் பெற்றது,

கனிஷ்ட பிரிவின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியும் விவாதத்தில் ஈடுபட்டன. இதில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி வெற்றிபெற்றது.

வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசில்களை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வழங்கினார்.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X