2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கமரா திருடியவருக்கு விளக்கமறியலில்

Kanagaraj   / 2014 மே 11 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.சிறுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் 24 ஆயிரம் ரூபா பெறுமதியான கமராவினைத் திருடிய நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மாகதேவா நேற்று சனிக்கிழமை (10) உத்தரவிட்டார்.

அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் கதவினை உடைத்து அங்கிருந்த கமராவிளை கடந்த வெள்ளிக்கிழமை (09) திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக குறித்த வீட்டு உரிமையாளர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்தார்.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், ரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தில் பேரில் கைது செய்து, மேலதிக நீதவானின் வாசஸ்தலத்தில் நேற்று (10) ஆஜர்ப்படுத்திய போதே, நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X