2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தொழில் உபகரணங்கள் திருட்டு

Suganthini Ratnam   / 2014 மே 12 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலிப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 10,000 ரூபா பெறுமதியான  மேசன் வேலைக்குரிய  உபகரணங்கள்  திருட்டுப் போயுள்ளதென்று  முறைப்பாடு செய்யப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவத்தினரால் 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்ட மேற்படி வீட்டில் புனரமைப்பு வேலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புனரமைப்பு வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்களது  உபகரணங்களை மேற்படி வீட்டினுள் வைத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

அவ்வாறே,  மேற்படி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை  (11) மாலை  வைத்துவிட்டுச் சென்ற தொழில் உபகரணங்களை திங்கட்கிழமை (12) காலை வந்து பார்த்தபோது திருட்டுப் போயிருந்தமை தெரியவந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருட்டு  தொடர்பில் விரிவான  விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X