2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிக்க எமக்கு உரிமையுண்டு: சி.வி.கே

Menaka Mookandi   / 2014 மே 14 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

உறவுகளை இழந்து கண்ணீர் சிந்தும் எங்களுக்கு, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் உரிமையுண்டு என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற இயல், இசை, நாடக விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துககொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'எந்த சட்டத்தாலும் அடக்குமுறையாலும் ஒரு மனிதனின் தோன்றாப்பொருளாக இருக்கும் உள்ளுணர்வைக் கட்டுப்படுத்த முடியாது' என்றார்.

'தமிழ் தேசிய மக்களின் உணர்வுகளும் அபிலாஷைகளும் எதிர்பார்ப்புக்களும் நிறைந்த யாழ். பல்கலைக்கழகம், இன்று அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.

அதாவது எமது உணர்வுகள் ஒன்றுகூடக்கூடிய ஒரு கட்டமைப்பு திட்டமிட்டு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் வரவிருக்கும் இரங்கல் நிகழ்வு தடுக்கப்பட்டுள்ளது.

நம் சமூகத்தில் உள்ள எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த மே மாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். தனிப்பட்ட ரீதியில் எனது குடும்பம் கூட பாதிக்கப்பட்டுள்ளது' என்று அவர் கூறினார்.

'வட மாகாணத்தில், தேசிய வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் உயிர் நீத்த எம் உறவுகளுககாக கண்ணீர் விடவோ நினைவுகூரவோ முடியாமல் உள்ளோம். என்றாலும் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் எமது உணர்வுகளை வெளிக்காட்டவே செய்வோம்.

இனிமேல் நாம் தலைநிமிர்ந்து நிற்கும் காலம் ஆரம்பமாகிவிட்டது என நான் நினைகிறேன். கலை கலாசாரம் மூலமாக எம் பண்பாடுகள் விழுமியங்கள் மீண்டும் மிளிர ஆரம்பித்துள்ளதை நான் பாக்ர்கிறேன்.

எம்மண் வன்முறை உணர்வாகப் பார்க்கப்படுகின்றது. இதனை நீக்கவும் எம்மைக் காத்துக்கொள்ளவும் இளைஞர்கள் முன்வர வேண்டும்' என அவர்  மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X