2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்றவர் கைது

Kogilavani   / 2014 மே 14 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்.உடுப்பிட்டி நகர்ப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்ற நபர் ஒருவரை புதன்கிழமை (14) கைதுசெய்துள்ளதாக வல்வெட்டித்துறை குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அவரிடமிருந்து 88 மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி நபர் ஒருவர் மதுபான விற்பனையில் ஈடுபடுகின்றார் என பொலிஸாரிற்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுபானம் வாங்குபவர் போல மாறுவேடத்தில் சென்ற பொலிஸார் குறித்த நபரைக் கையும் களவுமாகக் பிடித்துள்ளனர்.

பொலிஸார் மேற்படி நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X