2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கசிப்பு உற்பத்தி செய்த பெண்ணுக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 மே 15 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் புதன்கிழமை (14) உத்தரவிட்டார்.

மேற்படி பெண் தனது வீட்டின் சமையலறையில் அதிகாலை வேளைகளில் கசிப்பு உற்பத்தி செய்வதாக அயவலர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனடிப்படையில் புதன்கிழமை (14) அதிகாலை 3 மணியளவில் குறித்த பெண்ணின் வீட்டினைச் சுற்றிவளைத்த பொலிஸார் குறித்த பெண்ணினைக் கை செய்ததுடன், அவரிடமிருந்து 10 லீற்றர் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்களைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து மேற்படி பெண்ணை நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .