2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வேலணையில் கஞ்சா மீட்பு

Suganthini Ratnam   / 2014 மே 15 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். வேலணை 8ஆம் வட்டாரப் பகுதி கடற்கரையை அண்டிய பற்றையினுள்ளிலிருந்து ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவை வியாழக்கிழமை (15) மீட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட கடற்படையினர், கஞ்சா அடங்கிய பொதியை  மீட்டு தம்மிடம் ஒப்படைத்ததாகவும் இந்தியாவிலிருந்து இக்கஞ்சா கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் விரிவான  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X