2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் வெளிநடப்பு

Suganthini Ratnam   / 2014 மே 16 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை நினைவுகூர்ந்து யாழ். கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த முற்பட்டபோது, சபைத் தவிசாளர் பொ.வியாகேசு வெளிநடப்பு செய்தார்.

அதனைத்தொடர்ந்து அவையின் செயலாளரும் சபையிலிருந்து வெளியேறிவிட்டார்.

எனினும், ஏனைய 13 உறுப்பினர்களும் சேர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை சபையில் நினைவுகூர்ந்தனர்.

மேற்படி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று வெள்ளிக்கிழமை (16) தவிசாளர் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது, முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை  நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு  எழும்பியபோது, அவ்வாறு நினைவுகூர முடியாதெனக் கூறி தவிசாளர் வெளிநடப்புச் செய்தார். கூடவே சபைச் செயலாளரும் வெளிநடப்புச் செய்தார்.

இருந்தும், உறுப்பினர்கள் 13 பேரும் இணைந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து மாதாந்த சபை அமர்வை நடத்துவதற்காக சபைக்குள் தவிசாளர் உள்நுழைந்தபோது, 3 உறுப்பினர்கள் தவிசாளரின் செயலினைக் கண்டித்து வெளிநடப்புச் செய்தனர்.

மேற்படி சபையில் 18 உறுப்பினர்கள் இருப்பதுடன், அவர்களில் 16 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாவும் இருவர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராகவும் இருக்கின்றனர்.

அத்துடன், மேற்குறித்த அஞ்சலி செலுத்துவதென்ற தீர்மானத்தினை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் கணபதிப்பிள்ளையே முதலில் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X