2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சிறந்த முதியோர் சங்கங்களை தெரிவு செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2014 மே 16 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சிறந்த முதியோர் சங்கத்தை தெரிவு செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது.

அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி இதற்கான சுற்றுநிரூபத்தை மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட செயலர்கள், பிரதேச செயலர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனடிப்படையில் மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற முதியோர் சங்கங்கள் தெரிவு செய்யப்பட்டு, அந்தந்த மாவட்டச் செயலர்களினால் மாகாண சமூக சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாகாண பணிப்பாளரால் மாகாண மட்டத்தில் முதல் 3  இடங்களை பெறும் சங்கங்களை தேசிய ரீதியிலான போட்டிக்கு அனுப்பி வைப்பர்.
முதியோர் நலன்பேணலில் சிறப்பாக செயற்படும் முதியோர் சங்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக செயலகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X