2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ வாகனம் புகுந்ததில் அறுவர் காயம்

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    சொர்ணகுமார் சொரூபன்

இராணுவ வாகனமொன்று  வேகக்கட்டுப்பாட்டினை இழந்து யாழ்.கே.கே.எஸ் வீதி நாச்சிமார் கோவில் வாகனச்சாலைக்குள் இன்று சனிக்கிழமை (17) அதிகாலை புகுந்து விபத்துக்குள்ளானதில்  5 இராணுவ வீரர்களும் ஒரு பொதுமகனுமாக 6 பேர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவ வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்துச் சம்பவத்தில் ஆலய வாகனச்சாலை பலத்த சேதமடைந்தது. இது தொடர்பான விசாரணைகளை இராணுவப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X